கைவினைப்பொருட்கள் உலகில் தனியானதொரு இடத்தைப்பிடித்துள்ள பூம்புகார் என்ற CILLITRES அனைவராலும் அறியப்படும்.

கலைகளை பாதுக்கப்பதோடு கைவினைஞர்களின் வாழ்க்கைத் தரத்தைமேம்படுத்துவதை தமது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

Update: 2024-08-23 13:55 GMT
கைவினைப்பொருட்கள் உலகில் தனியானதொரு இடத்தைப்பிடித்துள்ள பூம்புகார் என்ற CILLITRES அனைவராலும் அறியப்படும். தமிழ்நாடு அரசுநிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள்வளர்ச்சிக்கழகம்.தொன்மையான கலைகளை பாதுக்கப்பதோடு கைவினைஞர்களின் வாழ்க்கைத் தரத்தைமேம்படுத்துவதை தமது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக கொடுக்கும் நோக்கத்தில் பலவகைக் கண்காட்சிகளை ஆண்டு முழுவதும் நடத்தி வருகிறது அந்த வகையில் பூம்புகார் விற்பனை நிலையம் மதுரையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணதரஷன் கண்காட்சி மற்றும் விற்பனை 19.08.2024 முதல் 30.08.2024 வரை நடைபெறுகிறது இக்கண்காட்சியில் காகித கூழ் கிருஷ்ணர். களிமண கிருஷ்ணர் பஞ்சலோகத்தலான கிருஷ்ணர் பித்தளை கிருஷ்ணர், மார்பில் பவுடரால் செய்யப்பட்ட கிருஷ்ணர். அலிகார பித்தளை கிருஷணர் சிலைகள், தஞ்சை ஓவியத்தில் கிருஷ்ணர் ஆயில் பைண்டிங், ரவி வரமா பைண்டிங் கிளாஸ் பைண்டிங் நூக்கமர கிருஷ்ணர், சந்தனமர கிருஷ்ணர். கருப்பு மற்றும் வெண் உலோகத்திலான கிருஷ்ணர் சிலைகள், பஞ்சலோக கிருஷ்ணர் டாலர் போன்றவை. கண்காட்சிமற்றும்விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது குறைந்தபட்சமாக ரூ 150 முதல் ரூ.80000 ஆயிரம் வரையிலான கைவினைபொருட்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது மேலும், குறிப்பிட்ட பொருட்களுக்கு 10% சதவித தள்ளுபடி வழங்கப்படுகிறது மேலும் பெரியார் ரயில் நிலையத்திற்கு எதிரில் செயல்பட்டுக்கொன்றிருந்த பூம்புகார் விற்பனை நிலையம் தற்பொழுது மாட்டுத்தாவணி அருகில் மேலூர் மெயின் ரோடு காய்கறி மார்க்கெட் எதிரில் அம்மா மெஸ் அருகில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதை பொது மக்களுக்கு தெரிவித்துகொள்கிறோம் இக்கண்காட்சியினைப்பற்றி தங்கள் ஊடகங்கள் மூலம் சிறப்பான செய்தியிணை வெளியிட்டு, இதில் பங்குபெறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Similar News