இராசிபுரம் வட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாநில வனத்துறை அமைச்சர் Dr. மா. மதிவேந்தன்,

இராசிபுரம் வட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாநில வனத்துறை அமைச்சர் Dr. மா. மதிவேந்தன்,

Update: 2024-09-23 15:05 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மாநில அரசு, மாணவ மாணவிகளின் கற்கும் திறனை மேம்படுத்துவதற்காக, அரசு பள்ளிகளில் பல்வேறு புதிய நவீன வசதிகளை ஏற்படுத்தி வருகிறது என்று மாநில வனத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.. நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாநில வனத்துறை அமைச்சர் Dr. மா. மதிவேந்தன், ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் 9 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.22.31 இலட்சம் மதிப்பீட்டில் 2 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.* கார்கூடல்பட்டி, நாரைக்கிணறு, முள்ளுக்குறிச்சி, பெரப்பஞ்சோலை மற்றும் மூலக்குறிச்சி உள்ளிட்ட ஊராட்சிகளில், வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.22.31 இலட்சம் மதிப்பீட்டில் 2 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுகளையும் அமைச்சர் மா. மதிவேந்தன் பெற்றுக்கொண்டு அவற்றின்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – II திட்டத்தின்கீழ் ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் நாரைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் மற்றும் இராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நாரைகிணறு ஊராட்சியில் ரூ. 8 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 22 எதிர் சவ்வூடு பரவல் RO குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என மொத்தம் ரூ.22.31 இலட்சம் மதிப்பீட்டில் 2 புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து, அயோத்திய தாசர் பண்டிதர் குக்கிராமம் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.3.53 இலட்சம் மதிப்பீட்டில் கார்கூடல்பட்டி ஊராட்சி, ஒன்பதாம்பாலிக்காடு பகுதியில், சிமெண்ட கான்கிரிட் சாலை அமைக்கும் பணி, ரூ.3.58 இலட்சம் மதிப்பீட்டில் ஒன்பதாம்பாலிக்காடு சிமெண்ட கான்கிரிட் சாலை அமைக்கும் பணி, ரூ.4.14 இலட்சம் மதிப்பீட்டில் செம்மண்காடு சிமெண்ட கான்கிரிட் சாலை அமைக்கும் பணி, பாரத பிரதமர் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.33.27 இலட்சம் மதிப்பீட்டில் முள்ளுக்குறிச்சி ஊராட்சி, உலிபுரம் சாலை முதல் தும்பல்பட்டியில் புதியதாக தார்சாலை அமைக்கும் பணி, ரூ.1.78 கோடி மதிப்பீட்டில் மூலக்குறிச்சி ஊராட்சி, பெரியகோம்பை சாலை முதல் தும்பல்பட்டி குட்டிகரடு சாலை அமைக்கும் பணி, இராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.4.45 இலட்சம் மதிப்பீட்டில் பெரப்பன்சோலை ஊராட்சி, மாவாறு கான்கிரிட் சாலை அமைக்கும் பணி, ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டில் மாவாறு சிமெண்ட் கான்கிரிட் சாலை அமைக்கும் பணி, ரூ.4.20 இலட்சம் மதிப்பீட்டில் பெரப்பன்சோலை சிமெண்ட் கான்கிரிட் சாலை அமைக்கும் பணி, ரூ.2.93 இலட்சம் மதிப்பீட்டில் மூலக்குறிச்சி ஊராட்சியில், பெரியகுறிச்சி கான்கிரிட் சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிகளுக்கு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார். முன்னதாக, மூலக்குறிச்சி பகுதியில் அரசு பள்ளி மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடிய வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன், தமிழ்நாடு அரசு,, பள்ளி மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளை அதிகரித்து வழங்கி வருகிறது. அதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது என்றும் இவற்றை பயன்படுத்திக் கொண்டு மாணவ மாணவிகள் நன்கு கல்வி கற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K.P. இராமசுவாமி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

Similar News