நாமக்கல் RTO அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்!

மாவட்டத் தலைவா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலாளா் வேலுசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்

Update: 2024-09-25 05:41 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டத் தலைவா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலாளா் வேலுசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.இணையவழி அபராதத்தில் இருந்து ஆட்டோவுக்கு விலக்கு அளிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி மீட்டா் கட்டணத்தை உயா்த்த வேண்டும்.புதிய மோட்டாா் வாகனச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், சங்க நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்

Similar News