120 துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் ஒன்றியக்குழு தலைவர் கே.பி. ஜெகநாதன் தொடங்கி வைத்தார்..

120 துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் ஒன்றியக்குழு தலைவர் கே.பி. ஜெகநாதன் தொடங்கி வைத்தார்..

Update: 2024-09-23 14:28 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்தில் உள்ள, 20 ஒன்றியங்களில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமை ஒன்றியக்குழு தலைவர் கே.பி. ஜெகநாதன், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவக்குமார், ஊராட்சி செயலாளர்கள் ரவி (எ) முத்துச்செல்வன், எஸ். பன்னீர்செல்வம், நிர்வாகிகள் உடன் இருந்தனர். முகாமில் இ.சி.ஜி., கர்ப்பை புற்று, மார்பக புற்று, தொற்றுநோய்களுக்கான பரிசோதனை, காசநோயை கண்டறிவதற்கான எக்ஸ்ரே நுண்கதிர் கருவி, தொழுநோயை கண்டறிதல் ஆகிய பரிசோதனைகள் நடந்தது. மேலும் கண் பரிசோதனை, கண் புரை கண்டறிதல், கண் பார்வை குறைபாடு கண்டறிதல், உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. மருத்துவ அலுவலர் செல்வி, சித்த மருத்துவர் பாலாமணி, மற்றும் கோபி, சரவணன், பல் மருத்துவர் டாக்டர் லீனா உள்ளிட்டோர் பரிசோதனை செய்தனர். இந்த முகாமில், 120 துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்துகொண்டனர். மேலும் இந்த முகாமில் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News