இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் 2 போ் காயம்
திருச்சி மாவட்டம் முசிறியில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இருவா் காயமடைந்தனா்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-13 05:07 GMT
இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் 2 போ் காயம்
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வசந்தபுரம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சின்னசாமி (52). இவா், அதே ஊரை சோ்ந்த ராமசாமி மனைவி செல்வி (60) என்பவரை தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு முசிறி- துறையூா் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இருவரும் காயமடைந்தனா். அவா்களை அருகில் உள்ளவா்கள் மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். புகாரின் பேரில் முசிறி போலீஸாா் காா் ஓட்டுநா் ஜான் போஸ்கோ (42) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.