24 மணி நேரத்திற்குள் புதிய குடிநீர் இணைப்பு : மேயர் தகவல்!

தூத்துக்குடி மாநகராட்சியில் மனு செய்த 24 மணி நேரத்திற்குள் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-29 04:05 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாநகராட்சியில் மனு செய்த 24 மணி நேரத்திற்குள் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக புதிய குடிநீர் இணைப்பு வேண்டி மனு செய்த 24 மணி நேரத்திற்குள் இணைப்பு வழங்கப்படும்" என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Similar News