லாரியில் கிராவல் மண் கடத்திய 3 பேர் கைது

சேலம் மாவட்டம்,புத்தூர் ஏரியில் இருந்து சட்டவிரோதமாக மணல் கடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-03-03 11:39 GMT
மணல் கடத்தல்

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், தலைவாசல் போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அண்ணாமலை தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது நத்தக்கரை துணை நிலையம் அருகே நின்ற டிப்பர் லாரிகளை சோதனை நடத்தினர். அதில் புத்தூர் ஏரியில் இருந்து சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் கோவிந்தம்பாளையத்தை சேர்ந்த சதாசிவம் அழைத்ததன்பேரில் மணல் கடத்திய லாரி டிரைவர்கள் ராமசேஷபுரம் நரேஷ் (வயது 26), வேப்பம்பூண்டி மணிகண்டன் (35), பட்டுதுறை பெரியசாமி (35) ஆகியோரை இன்ஸ்பெக்டர் அழகுராணி வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். மேலும் 3 டிப்பர் லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News