விபத்தில் 4 பேர் காயம் - மருத்துவமனையில் சேர்த்த எம்எல்ஏ

சிவகங்கை அருகே விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை எம்எல்ஏ மருத்துவமனையில் சேர்த்தார்.

Update: 2024-03-11 05:46 GMT

சிவகங்கை எம்.எல்.ஏ

சிவகங்கை மாவட்டம், அழகாபுரி கிராமத்தில் வசித்து வருபவர்கள் குமார் - முத்துமாரி தம்பதியர். இவர்களுக்கு சதீஷ் என்கிற 13 வயது மகனும், நாகஸ்ரீ என்கிற 9 வயது மகளும் உள்ளனர். குமார் தனது குடும்பத்தினரை இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு நாட்டரசன்கோட்டை விலக்கு வழியாக தனது சொந்த கிராமமான மானாச்சேரிக்கு சென்றுள்ளனர். இவர்கள் நாட்டரசன்கோட்டை தண்ணீர் பந்தல் அருகே வரும்போது எதிரே வந்த கார் இவர்களது இரு சக்கர வாகனத்தில் மோதியதில் அனைவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து கிடந்துள்ளனர். இந்நிலையில் அதே நேரத்தில் தேவகோட்டையிலிருந்து சிவகங்கை நோக்கி சிவகங்கை எம்.எல்.ஏவும், அதிமுக மாவட்ட செயலாளருமான செந்தில்நாதன் வந்த போது விபத்தில் சிக்கியவர்களை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் அவர்கள் அனைவரையும் மீட்டு தனது காரிலேயே சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்த்ததுடன் உடனடியாக மருத்துவக்கல்லூரி முதல்வரை அழைத்து காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க வலியுறுத்தியதை தொடர்ந்து அவர்கள் அனைவருக்கும் அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அதிமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News