5- ரோடு அருகே கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது. 100 கிராம் கஞ்சா பறிமுதல்.

5- ரோடு அருகே கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது. 100 கிராம் கஞ்சா பறிமுதல்.

Update: 2024-10-24 11:01 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
5- ரோடு அருகே கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது. 100 கிராம் கஞ்சா பறிமுதல். கரூர் மாநகர பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக கரூர் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அக்டோபர் 23ஆம் தேதி காலை 10:30 மணி அளவில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 5- ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, கரூர் அடுத்த நெரூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த மதி கண்ணன் மகன் நந்தகுமார் வயது 19 என்ற இளைஞர் 100 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. உடனே ரூபாய் 1000 மதிப்புள்ள 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் நந்தகுமாரை கைது செய்து, நவம்பர் 6 ஆம் தேதி வரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Similar News