சைக்கிளில் சென்றவர் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி, கூலித் தொழிலாளி படுகாயம்

குமாரபாளையம் அருகே சைக்கிளில் சென்றவர் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி, கூலித் தொழிலாளி படுகாயமடைந்தார்.

Update: 2024-10-24 12:25 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கருப்புசாமி, 53. இவர் அக். 21, காலை 09:10 மணியளவில் சேலம் கோவை புறவழிச்சாலை, சர்வீஸ் சாலையில் சைக்கிளில் சொந்த வேலையாக சென்று கொண்டிருந்தார். இவருக்கு எதிரில் வேகமாக வந்த தனியார் கல்லூரி பேருந்து இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். யாவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து, கல்லூரி பேருந்து ஓட்டுனர் செல்வகுமரன், 65, என்பவரை கைது செய்தனர்.

Similar News