போதை  பொருட்கள் விற்ற 5 பேர்  கைது

குமாரபாளையம் பகுதியில் போதை  பொருட்கள் விற்ற 5 பேர்  கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-10-24 12:12 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் போதை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். ஆனங்கூர் சாலை, சூரியகிரி மலை, கல்லங்காட்டுவலசு பஸ் நிறுத்தம் பாலம்  அருகே போதை பொருட்கள் விற்பதாக தகவல் கிடைத்து, நேரில் சென்ற போலீசார் அங்கு விற்பனை செய்து கொண்டிருந்த மோகன்ராஜ், 27, விக்னேஸ்வரன், 25, சூரியகுமார், 24 , பாலகிருஷ்ணன், 26, பழனிச்சாமி, 32, ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார் கைது செய்து 5 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Similar News