கரூர் அருகே 3 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-18 15:23 GMT

கோப்பு படம்

.கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் தர்மலிங்கத்துக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மே 17ஆம் தேதி மதியம் 1:30 மணி அளவில், வெங்கமேடு சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது என் எஸ் கே நகர் பகுதியில் உள்ள ஒரு முள் தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர், கோதுர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார், சின்னகுளத்து பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன், அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 200 ஐயும் பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags:    

Similar News