இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்

இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-06 13:31 GMT

ஐஜேகே ஆலோசனை கூட்டம் 

 பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய எதிரில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் மாவட்ட தலைவர் AVR ரகுபதி தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு இந்திய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் ஜெயசீலன், இந்திய ஜனநாயக கட்சி முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், இந்திய ஜனநாயக கட்சி முதன்மை செயலாளர் சத்தியநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பிப்.17ம் தேதி சிறுகனூரில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் நடைபெறும் தேசம் காப்போம் - தமிழை வளர்ப்போம் மாநில மாநாட்டிற்கு பெரம்பலூர்மாவட்டத்தில் இருந்து ஐஜேகே, மற்றும் பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த வார்கள், அதிக எண்ணிக்கையில் அழைத்து சென்று மாநாட்டை வெற்றி மாநாடாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம் என பொதுச் செயலாளர் ஜெயசீலன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பார்க்க வ குல முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் அன்பு துரை, நிர்வாக குழு உறுப்பினர் பாரி கணபதி, திருச்சி மாவட்ட செயலாளர் கனகராஜ். மற்றும் ஐஜேகே பெரம்பலூர் மாவட்ட பொருளாளர் பரமசிவம், மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத், பெரம்பலூர் நகர தலைவர் RCR ராமலிங்கம், நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய தலைவர்கள் அழகுவேல், காமராஜ், ரகுபதி,

செந்தில்குமார் மற்றும் மகளிர் அணி, பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News