மயிலாடுதுறை அருகே பெண் தொழிலாளி பைக் மோதி பலி

மயிலாடுதுறை அருகே சமையல் பணி முடிந்து சைக்கிளில் பெண் சென்றபோது பைக் மோதி பலியானார்.

Update: 2024-03-23 15:41 GMT

காவல் நிலையம் 

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோயில் தனியார் உணவு விடுதியில் மேமாத்தூர் கேணிக்கரை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி பூமா என்பவர் சமையலராகப் பணிபுரிந்து வந்தார். சம்பவ தினத்தன்று இரவு பணி முடித்துவிட்டு செம்பனார்கோவிலிலிருந்து மேமாத்தூரில் உள்ள தன் வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

மேமாத்தூர் கடை வீதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் நிலைத்தடுமாறி  சாலையில் விழுந்து தலையில் அடிபட்டு சம்பவத்தை இடத்திலேயே இறந்து விட்டார்.  

இது குறித்து செம்பனார் கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய  ஆறுபாதி ராஜாராம் மகன் விக்னேஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்

Tags:    

Similar News