மாவட்ட கல்வி அறக்கட்டளைக்கு நிதி உதவி

விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளைக்கு சமூக ஆர்வலர் புஷ்பராஜ் என்பவர் ரூ.25,000 நிதியுதவி வழங்கினார்.

Update: 2024-05-13 15:09 GMT

நிதியுதவி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளைக்கு நிதியுதவியாக இராஜபாளையம் சமூக ஆர்வலர் புஷ்பராஜ் சார்பில் ரூ.25,000/-க்கான காசோலையினை அவரது உதவியாளர் முகமது மீரான் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜெயசீலன் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளை என்ற ஒரு சமூக அமைப்பு மாவட்ட நிர்வாகம், தொழில் முனைவோர்கள், தன்னார்வலர்கள் இணைந்து உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனுடைய நோக்கம் விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், ணவிகளுக்கு நல்ல திறமை மற்றும் கல்வியில் ஆர்வம் இருந்தும் பொருளாதார அடிப்படையில் வசதி குறைவு மற்றும் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக தங்களுடைய கல்வியினை தொடர முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் கல்வியினை தொடர உதவி செய்வதே இதன் நோக்கமாகும்.

இந்த விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளைக்கு நிதி உதவி வழங்க விரும்புவோர் 04562-252525, 9445043157 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் கல்வி அறக்கட்டளைக்கு வங்கி வரைவோலை மூலம் நிதியுதவி வழங்க விரும்புவோர் CHAIRMAN/DISTRICT COLLECTOR, VIRUDHUNAGAR என்ற பெயரிலும், வங்கிக் கணக்கில் வழங்க விரும்புவோர் CHAIRMAN/DISTRICT COLLECTOR VIRUDHUNAGAR KALVI ARAKATALAI, The Virudhunagar District Central Co-operative Bank Ltd, A/c No: 717770590, IFSC code: TNSC0011800, MICR Code: 626800007 என்ற வங்கிக்கணக்கிலும் நிதியுதவி அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News