வலங்கைமானில் நாட்டு வெடி பதுக்கி வைத்திருந்தவர் கைது

Update: 2023-11-06 05:33 GMT

கைது செய்யப்பட்ட கார்த்தியுடன் போலீசார் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவாரூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாருக்கு வலங்கைமான் பகுதியில் நாட்டு வெடிகள் அதிக அளவில் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ் பி உத்தரவின் படி, வலங்கைமான் காவல் அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் வலங்கைமான் அருகே நல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த ராகவன் என்பவரின் மகன் கார்த்தி என்பவர் கூரை வீட்டில் அதிக அளவில் நாட்டு வெடிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர் .மேலும் போலீசார் அவரிடமிருந்து நாட்டு வெடிகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News