பட்டாசு தயாரிக்கும் மூலப்பொருள் வைத்திருந்த நபர் கைது !
பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Update: 2024-03-12 10:58 GMT
விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கணேசன் இவர் ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒண்டிப்புலி நாயக்கனூர் முனிஸ்வரன் காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு சசிகுமார் என்பவர் எந்தவித அரசு அனுமதியும் உரிமமும் இல்லாமல் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருளான வெள்ளை திரி 25 ரோஸ் வைத்திருந்தது தெரிய வந்தது இதை அவரிடம் இருந்த வெள்ளை திரியை பறிமுதல் செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்