நடந்து சென்ற முதியவர் மீது டூவீலர் மோதி விபத்து
நடந்து சென்ற முதியவர் மீது டூவீலர் மோதி விபத்து. காவல்துறை வழக்கு பதிவு.;
Update: 2024-01-18 10:11 GMT
முதியவர் மீது டுவிலர் மோதி விபத்து
முதியவர் மீது டுவிலர் மோதி விபத்து
முதியவர் மீது டுவிலர் மோதி விபத்து
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, ராயனூர், எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி வயது 58.இவர் ஜனவரி 15ஆம் தேதி இரவு ஒன்பதே முக்கால் மணியளவில், கரூர்- ராயனூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ராயனூர் சக்தி டீ கடை அருகே சென்றபோது, தாந்தோணிமலை அருகே உள்ள திருமாநிலையூர் பகுதியைச் சேர்ந்த பரமன் என்பவர் ஓட்டி வந்த டூ வீலர், நடந்து சென்ற வேலுசாமி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேலுச்சாமிக்கு இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வேலுச்சாமி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய பரமன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.