சுற்றுலா சென்று திரும்பிய வாகனம் விபத்து

தேனி மாவட்டம், அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவில் செல்லும் சாலை சந்திப்பில் உள்ள பைபாஸில் சுற்றுலா வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து.

Update: 2024-02-09 09:39 GMT

கார் விபத்து

தேனி மாவட்டம், அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவில் செல்லும் சாலை சந்திப்பில் உள்ள பைபாஸில் கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று விட்டு தனது சொந்த ஊரான கேரளாவில் உள்ள கொல்லத்திற்கு சென்று கொண்டிருந்த நண்பர்கள் வீரப்ப அய்யனார் கோவில் எதிரே உள்ள பைபாஸ் சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் கீழே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

அதில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த அனைவரும் உயிர்த்தப்பினார்கள். சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறையினர் சென்று அவர்களை மீட்டு முதல் உதவி செய்யப்பட்டது.

Tags:    

Similar News