கால்நடை மருத்துவ முகாம் வேணும் !

கால்நடை மருத்துவ முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அரூர், செல்லம்பட்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-12-21 12:43 GMT

கால்நடை மருத்துவ முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அரூர், செல்லம்பட்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கால்நடை மருத்துவ முகாம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை அரூர், டிச. 21: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த செல்லம்பட்டியில், கடந்த, 4 நாட்களில், 2 கறவை மாடுகள் இறந்துள்ளதால், கால்நடை வளர்ப்போர் பீதியடைந்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகள் திடீரென கீழே விழுந்து இறந்து விடுகின்றன. கடந்த, 3 நாட்களுக்கு முன், செல்லம்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரது கறவை மாடு இறந்தது. இந்நிலையில் நேற்றும், அவருக்கு சொந்தமான மாடு ஒன்று உயிரிழந்தது. மாடுகள் இறப்பால் அப்பகுதியில் கால் நடை வளர்ப்போர் பீதியடைந்துள்ளனர். அம்மை உள்ளிட்ட நோய்கள் பரவி வரும் நிலையில், செல்லம்பட்டியில் கால்நடை மருத்துவ முகாம் அமைத்து, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News