கைத்தறிக்கு ஜிஎஸ்டி வரி ரத்து - ஏஐடியூசி கோரிக்கை

கைத்தறி நெசவு தொழிலை பாதிக்கும் ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என ஏஐடியூசி கைத்தறி நெசவு சம்மேளன மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-10-30 07:39 GMT

ஏஐடியூசி கூட்டம்  

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் ஏஐடியூசி சம்மேளனத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் தஞ்சாவூர் கீழராஜவீதி மாவட்ட ஏஐடியூசி அலுவலகத்தில் மாநிலத் தலைவர் ஜி.மணிமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் எஸ்.பி.ராதா நடைபெற்ற பணிகள் குறித்தும், ஒன்றிய மாநில அரசுகள் அழிந்து வரும் கைத்தறி நெசவுத் தொழிலைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும், தொழிலாளர்கள் படும் வேதனைகள் குறித்தும் விரிவாக பேசினார். கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர் என். எஸ்.பெருமாள், நிர்வாகிகள் கே.தஙகராசு, கே.ராஜாராம், கோ.சந்திரன், எம்.ராம்குமார், கே.கே.தாமோதரன், ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.தில்லைவனம், மாவட்ட செயலாளர் துரை .மதிவாணன் உள்ளிட்டார் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நாளுக்கு நாள் நசிந்து வரும் கைத்தறி நெசவுத் தொழிலைப் பாதுகாக்க ஒன்றிய அரசு விதித்துள்ள ஜி எஸ் டி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தயாராகும் துணிகளுக்கு வழங்கும் ரிபேட் மானியத்தை மாற்றி அமைத்து, சேலையின் உற்பத்தி விலைக்கு 20 சதவீதம் ரிபேட் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும், முதியோர்களுக்கு ஓய்வூதியம் 6000 ரூபாய் வழங்க வேண்டும் என்று ஒன்றிய, தமிழ்நாடு அரசை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கை, தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து வருகின்ற நவம்பர் மாதம் 26,27, 28 தேதிகளில் நடைபெறும் சென்னை ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறும் பெருந்திரள் தர்ணா போராட்டத்தில் முழுமையாகப் பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News