விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை தேவை
முகப்பு சாலை அருகில் சாலையோரம் மரத்தில் பெரிய மரக்கிளை காய்ந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் சாலையில் விழும் நிலையில் உள்ளது. விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை தேவை.;
By : King 24x7 Angel
Update: 2024-02-06 09:25 GMT
விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை தேவை
கடலூர் - விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அருகே நெத்தனாங்குப்பம் கிராமம் செல்லும் முகப்பு சாலை அருகில் சாலையோரம் மரத்தில் பெரிய மரக்கிளை காய்ந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் சாலையில் விழும் நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் முன் காய்ந்த மரக்கிளைகளை வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.