அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்ததை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல்

திருச்செங்கோட்டில் நகராட்சி ரவுண்டானா பகுதியில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்ததை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல் செய்தனர்.

Update: 2024-03-02 07:52 GMT

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் உள்ள நடை மேம்பாலத்தின் மீது விளம்பர பதாகைகள் யாரும் வைக்க கூடாது என காவல்துறை அறிவிப்பு இருந்தும் அதிமுகவினர் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று விளம்பர பதாகை வைக்க அனுமதி கேட்டபோதும் மறுத்த போலீசார் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆற்றிய பணிகள் என்கிற பெயரில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகை அகற்றாததை கண்டித்துதிருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி தலைமையில் அதிமுகவினர் சாலை மறியல் உடனடியாக பதாகையை அகற்றுவதாகபோலீசார் உறுதி அளித்ததின் பேரில் பேரில் சாலை மறியல் விளக்கிக் கொள்ளப்பட்டது.

சுமார் அரை மணி நேரம் நடந்த சாலை மறியலால் சங்ககிரி ரோடு நாமக்கல் ரோடு ஈரோடு ரோடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்

Tags:    

Similar News