திமுக அரசை கண்டித்து அதிமுக மனித சங்கிலி போராட்டம்!

புதுக்கோட்டையில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.

Update: 2024-03-13 09:12 GMT

புதுக்கோட்டையில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கீரமங்கலம், கறம்பக்குடி ஆகிய பகுதிகளில் அதிமுக சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. ஆலங்குடியில் வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக நகரச்செயலர் பழனிவேல் தலைமையில் அக்கட்சியினர், தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில், கட்சியின் ஒன்றியச்செயலர்கள் ராஜேந்திரன், பழனிச்சாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ஏ.டி.மணமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல, கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே கட்சியின் நகரச்செயலர் வனங்காமுடி தலைமையிலும், கறம்பக்குடி பேருந்து நிலையம் அருகே கட்சியின் நகரச்செயலர் விவேகானந்தன் தலைமையிலும் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News