வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி !

இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், மேற்பார்வையில் நடைபெற்றது.

Update: 2024-03-20 09:11 GMT

வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி

2024 மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் , விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யும் பணி (1st Randomization) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்,  மேற்பார்வையில் நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று (20.03.2024) நடைபெற்ற  இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் தஜெ.பாலசுப்பிரமணியம், உதவி ஆட்சியர் (பயிற்சி) ரஜத் பீட்டன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா,  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News