பழனி அருகே சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய அன்னதான நிகழ்வு

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோயில் விழாவில் சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இஸ்லாமியர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2024-06-30 09:27 GMT

அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் உள்ள பட்டாளத்தம்மன் திருக்கோயிலில் ஆனி மாத திருவிழா நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கிய நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதில் திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் நூற்றுக்கணக்கானோருக்கு அன்னாதானம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கும்,

பட்டாளம்மன் திருக்கோவில் பக்தர்களுக்கும் ஆயக்குடி காயிதே மில்லத் சிறுபான்மை சமூக சேவை அமைப்பின் சார்பில் திருக்கோயில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இஸ்லாமியர்கள் அன்னதானம் செய்ய முண்ணூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னதான உணவு அருந்தினர்.

Tags:    

Similar News