பேரறிஞர் அண்ணா 55வது நினைவு நாள் அமைதி பேரணி

வெண்ணந்தூர் ஒன்றியத்தில் பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாள் அமைதி பேரணி

Update: 2024-02-03 07:51 GMT
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் கட்டணாச்சம்பட்டி ஊராட்சியில் பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாள் அமைதி பேரணி வெண்ணந்தூர் ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றியக்குழு உறுப்பினருமான துரைசாமி தலைமையில், வெண்ணந்தூர் ஒன்றிய கழகப் பொருளாளர் பாலு முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட அயலக அணி அமைப்பாளர் விஜயபாஸ்கர், மாவட்ட நெசவாளர் அணி துணை தலைவர் ரவி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் பூபாலன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ரவி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக், ராசிபுரம் சட்டமன்ற சமூக வலைதள பொறுப்பாளர் ரவீந்தர், வெண்ணந்தூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் அன்பு, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி, கிளைக் கழகச் செயலாளர்கள் சதீஷ்குமார், சக்திவேல், குமார், மோகன்ராஜ், நல்லதம்பி, சுப்பிரமணி, மாதையன், வேலவன், கணேசன், அருணாச்சலம், சின்னண்ணன், கோபாலகிருஷ்ணன், கருணாநிதி, செல்வராஜ் கழக நிர்வாகிகள் யுவராஜ், சண்முகம், கார்த்திக், வித்யாசாகர், மார்கண்டன், மாணவரணி சசிகுமார், ராசிபுரம் கிஷோர், அத்தனூர் தகவல் தொழில்நுட்ப அணி அருண்குமார் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News