அறந்தாங்கி - சென்னை ஏசி பஸ் இயக்க கோரிக்கை!

அறந்தாங்கியில் இருந்து சென்னைக்கு குறைந்த கட்டணத்தில், குளிர்சாதனம் மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய பஸ்களை இயக்க அரசு விரைவு போக்குவ ரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-21 06:02 GMT

ஏசி பஸ்

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரிய நகரங்களில் அறந்தாங்கியும் ஒன்றாகும். அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய தாலுகாக்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் பல்வேறு பணிகள் நிமித் தமாக சென்னைக்கு சென்று வருகின்றனர். அறந்தாங்கி பகுதியில் இருந்து 3 அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களும், கும்பகோணம் கோட்டத்தின் சார்பில் ஒரு பஸ்சும் சென்னைக்கு இயக்கப்படுகின்றன. குளிர்சாதனம் மற்றும் படுக்கை வசதியுடன் தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால்,அரசின் சார்பில் இயக்கப்படும் பஸ்களில் போதுமான வசதி இல்லாததால் கூடுதல் கட்டணத்தில் தனியார் பஸ்களில் பயணிகள் பயணம் செய்யும் நிலை உள்ளது. இதை தவிர்க்க அறந்தாங்கியில் இருந்து சென்னைக்கு குறைந்த கட்டணத்தில், குளிர்சாதனம் மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய பஸ்களை இயக்க அரசு விரைவு போக்குவ ரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News