அட்சய திருதியை முன்னிட்டு நகைகள் வாங்க குவிந்த மக்கள்!

கோவையில் சிறப்பு சலுகை தள்ளுபடி அறிவிதுள்ளதால் பொதுமக்கள் நகைகளை வாங்க குவிந்துள்ளனர்.

Update: 2024-05-10 08:14 GMT

அட்சய திருதியை நாளில் நகை,மஞ்சள்,கல் உப்பு ஆகியவற்றை வாங்கி வீட்டில் வைத்தால் வாழ்வில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இந்நாளில் பெரும்பாலான மக்கள் தங்கம் வெள்ளி வைர நகைகளை வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

நடப்பாண்டில் அட்சய திருதி நாளான இன்று பெரும்பாலான மக்கள் நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை ஒப்பணக்கார வீதி,டவுன்ஹால், காந்திபுரம்,கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.காலை முதலே மக்கள் நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் அனைத்து கடைகளிலும் சிறப்பு சலுகைகள் தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாகவே காணப்படுகிறது. அட்சய திருதியை முன்னிட்டு அனைத்து கடைகளிலும் புதுபுது டிசைன்களில் நகைகள் புதுவரவாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News