மேயர் அறைக்கு அருகே தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவர் - பரபரப்பு

Update: 2023-12-03 10:04 GMT

 நாசர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோவை: உக்கடம் ரேஸ்மா கார்டன் பகுதியை சேர்ந்தவர் நாசர்(47) ஆட்டோ டிரைவராக உள்ளார்.தற்போது இஸ்லாமிய கட்சி ஒன்றில் மாநில பேச்சாளராக உள்ள இவர் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலை பெற்றவர். நேற்று டீசலுடன் மாநகராட்சி அலுவலக விக்டோரியா ஹால் அருகேயுள்ள சுற்றுச்சுவர் வழியாக மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்த நாசர் டீசலை தன் மீது ஊற்றியபடி மேயர் அறையை நோக்கி ஓடியவர் தீ பற்ற வைக்க முயற்சி செய்துள்ளார்.இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்து உக்கடம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மாநகராட்சி அலுவலகத்திற்குள் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இந்நிலையில் நாசர் நேற்று முன்தினம்(31.11.2023) தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்ததாக கோவை மாநகராட்சி உதவி பொறியாளர் ஜீவராஜ்(58) உக்கடம் போலீசில் புகார் அளித்ததன் பேரில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாசர் சிறையில் அடைத்தனர். நாசர் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் வேண்டி பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில் அதன் காரணமாக இவ்வாறு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News