தண்டவாளங்களில் செய்யக்கூடாதவை குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல் ரயில் வழித்தடம் அருகே செயல்படும் பள்ளி மாணவர்களிடையே தண்டவாளங்களில் செய்யக்கூடாதவை குறித்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

Update: 2023-11-18 06:42 GMT

தண்டவாளங்களில் செய்யக்கூடாதவை குறித்து விழிப்புணர்வு


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழகத்தில் தண்டவாளப்பகுதியில் சிறுவர்கள் ஜல்லிக்கற்கள்,வேறு ஏதாவது பொருட்களை விளையாட்டுத்தனமாக வைக்கின்றனர். இதைத்தடுக்கும் வகையில் அந்தந்த மாவட்டங்களில் பணிபுரியும் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தண்டவாளங்கள் அருகே செயல்படும் பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது.

அதன்படி திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்புபடை இன்ஸ்பெக்டர் சுனில்குமார் தலைமையிலான போலீசார் அம்பாத்துறை செட்டியப்பட்டி அருகே உள்ள அரசு பள்ளி மாணவர்களிடம் தண்டவாளங்கள் அருகே செல்லக்கூடாது. கற்கள் உள்ளிட்ட இரும்பு பொருட்களை வைக்ககூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

Similar News