கரூர் அருகே விபத்து

முன்னாள் சென்ற லாரி திடீரென பிரேக் இட்டதால், பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்து. வாலிபர் படுகாயமடைந்தார்.;

Update: 2024-05-07 18:04 GMT

கோப்பு படம்

.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, ரங்கநாதபுரம் அருகே உள்ள கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் வயது 32. இவர் மே 5ம் தேதி இரவு 7:20 மணியளவில், கரூர் - திருச்சி பைபாஸ் சாலையில், அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சோழா ஓட்டல் எதிரே சென்றபோது, இவருக்கு முன்னாள் சென்ற TN 47 Y 6556 என்ற எண் கொண்ட அசோக் லேலண்ட் லாரி, எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல், திடீரென பிரேக் இட்டதால், லாரிக்கு பின்னால் சென்ற சுரேஷின் வாகனம் லாரியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் சுரேஷுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சுரேஷின் மனைவி கோமதி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக விபத்து ஏற்பட காரணமான லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags:    

Similar News