இரணியல் அருகே பைக் மோதல்: ஒருவர் பலி

இரணியல் அருகே பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.

Update: 2024-05-03 12:14 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள சடையமங்கலத்தை சேர்ந்தவர் ஐயப்பன் (56)விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று மதியம் மொட்டவிளை என்ற பகுதியில் சைக்கிளில் சென்றார். அங்கு சாலையை கடக்கும் போது நாகர்கோவிலில் இருந்து இரணியல் செல்லும் சாலையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ஐயப்பன் ஓட்டிச் சென்ற சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய ஐயப்பனையும்,

மோட்டார் சைக்கிளில் வந்த கண்டன் விளையை சேர்ந்த பிரதீப் (25) ஆகிய இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.      அங்கு  அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி ஐயப்பன் நேற்று இரவு உயிரிழந்தார்.

இது குறித்து ஐயப்பனின் மனைவி கோமதி என்பவர் இரணியல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News