தவணைக்கு கொடுத்த பைக்: பெண்ணை தாக்கி பிடுங்கி சென்றவர் மீது வழக்கு

மயிலாடுதுறையில் உரிய ஆவணங்களை சரிபார்க்காமல்  தவணை முறையில்  விற்ற பைக்கை பிடுங்கி பெண் வாடிக்கையாளரை தாக்கியவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2024-06-14 12:47 GMT
சிகிச்சை பெறும் பெண்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அவையாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த குமார் மனைவி நிவேதா. தனியார் பார்சல் சர்வீஸ்சில் வேலை செய்து வருகிறார்.

இவர் கடந்த 11ஆம் தேதி மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் உள்ள தாசரதி டிவிஎஸ் நிறுவனத்தில் தனது கணவர் குமார் பெயரில் இருசக்கர வாகனத்தை  (ஸ்கூட்டி) தனியார் வங்கியில் 24 மாதம் பணம் செலுத்துவதாக ஒப்பந்தத்தின் படி ரூபாய் 6 ஆயிரத்து 900  முன்பணம் கட்டி கடனுக்கு வாகனத்தைக் கடனுக்கு வாங்கியுள்ளார்.

ஏற்கனவே குமார் இருசக்கர வாகனம் வாங்கி பணம் செலுத்தாதது தெரிய வந்ததால் வாகனத்தை திருப்பி ஒப்படைக்கும்படி டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனை பிரிவு நிர்வாகி முருகமங்கலத்தை சேர்ந்த சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். 

வாகனத்தை குமார் ஒப்படைக்கவில்லை. இந்நிலையில் ஆனதாண்டவபுரம் அருகே நிவேதா இருசக்கர வாகனத்தில் சென்றபோது சௌந்தர்ராஜன் வழிமறித்து தாக்கி நிவேதாவின் டாப்ஸை பிடித்து இழுத்ததில் உடை கிழிந்து கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின் அருந்ததாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்குள்ளான  நிவேதா மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து நிவேதா மயிலாடுதுறை காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். போலீசார் விசாரணையில்  அதிக வாகனங்களை விற்பனை செய்வதற்காக உரிய ஆவனங்களை சரிபார்க்காமல்

வாகனத்தை கொடுத்துவிட்’டு தகறாரில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார்  பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் சௌந்தர்ராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News