செய்யாறு அருகே பள்ளியில் நூல் வெளியீட்டு விழா

Update: 2023-11-11 04:41 GMT

பள்ளியில் நூல் வெளியீட்டு விழா


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்துள்ள வெம்பாக்கம் வட்டம் வடமணப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று பிற்பகல் நூல் வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வேதபுரி தலைமை தாங்கி, ஆசிரியர் ரகுபதி எழுதிய நானும் பேசுவேன் என்ற நூலினை வெளியிட்டார்.

முதல் பிரதியினை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அன்பரசு பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதிநிதியை உதவி தலைமை ஆசிரியர் செல்வம் எழுத்தாளர் எறும்பூர் செல்வகுமாரிடம் வழங்கினார். பின்னர் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு அடுத்தடுத்து நூல் பிரதிகள்வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை ஆசிரியர் சங்கர் தொகுத்து வழங்கினார். ஆசிரியர்கள் அருள்விழிச்செல்வி, அருள் செல்வம், சாண்டில்யன், கௌரவ விரிவுரையாளர் மதிவேந்தன், பிளஸ் டூ மாணவி ஜெயஸ்ரீ, உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். நூலாசிரியர் ரகுபதி ஏற்புரை வழங்கினார்.

Tags:    

Similar News