வழக்கம் போல் இயங்கிய பஸ்கள்

ஏற்காட்டில் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்படுவதால் பயணிகளுக்கு போக்குவரத்தில் இடையூறு தவிர்க்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-09 06:22 GMT
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனால் அரசு பேருந்துகள் ஓடாது என தெரிவிக்கப்பட்டது. நேற்று நள்ளிரவு முதல் போராட்டம் துவங்கிய நிலையில் ஒருங்கிணைந்த சேலம் போக்குவரத்து கோட்டத்தில் உள்ள பேருந்துகள் அட்டவணைப்படி இயக்கப்பட்டு வருகிறது. ஏற்காடடில் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் எந்த ஒரு சிரமமும் இன்றி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
Tags:    

Similar News