குட்கா விற்பனை செய்ததாக 795 பேர் மீது வழக்கு

குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக 795 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என திருச்சி காவல் ஆணையர் காமினி பேட்டி அளித்தார்

Update: 2023-11-27 16:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு திருச்சி மாநகரில் காந்தி மார்க்கெட், இ.பி. ரோடு மற்றும் பீமநகர் பகுதியில் உள்ள மூன்று கடை உரிமையாளர்கள் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு இரண்டு மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருச்சி காந்தி மார்க்கெட், இ.பி. ரோடு மற்றும் பீமநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கும் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் இன்று உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு முன்னிலையில் காவல் துறையினர் சீல் வைத்தனர். இதனைத் தொடர்ந்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி செய்தியாளரிடம் கூறுகையில்... உணவு பாதுகாப்பு துறை மற்றும் திருச்சி மாநகர காவல் துறையும் இணைந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யும் கடைகள் சோதனை செய்யப்படுகிறது.

அதன்படி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த மூன்று கடைகளுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது. அரசு உத்தரவை மீறி செயல்படும் கடைகளுக்கு தயவு தாட்சனை இல்லாமல் தண்டிக்கப்படுவர். இனி தொடர்ந்து இந்த சோதனையின் நடைபெறும். இன்று ஒரு நாளோடு சோதனை முடியாது. திடீர் சோதனைகள் எப்பொழுது வேண்டுமானாலும் நடைபெறும். தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த சோதனைகளில் திருச்சி மாநகரிலும் நடைபெற்று வருகிறது. இந்த வருடத்தில் மட்டும் 795 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

Tags:    

Similar News