சிதம்பரம்: தில்லை காளியம்மன் கோவிலில் ரூ.12.97 லட்சம் உண்டியல் காணிக்கை

சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் உண்டியலில் ரூ.12.97 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

Update: 2024-06-30 09:21 GMT

தில்லை காளியம்மன் கோவில்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோவிலில் உள்ள 6 உண்டியல்கள் இந்து சமய அறநிலைத்துறை கடலூர் உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) வேல் விழி, ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. இதில் 12 லட்சத்து 97 ஆயிரத்து 789 ரூபாய் மற்றும் 36 கிராம் தங்கம், 175கிராம்வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.
Tags:    

Similar News