அண்ணாநகர் மண்டலத்தில் பணிகளை ஆய்வு செய்த தலைமை செயலாளர்

அண்ணாநகர் மண்டலத்தில் 1.15 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை தலைமைச் செயலாளர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-06-09 11:58 GMT

பணிகளை ஆய்வு செய்த தலைமை செயலாளர் 

இன்று (08.06.2024) தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட கங்காதீஸ்வரர் கோயில் குளத்தில் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியின் கீழ், ரூ.1.15 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, கூடுதல் தலைமைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன்,

இணை ஆணையர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய செயல் இயக்குநர் செ.சரவணன் மத்திய வட்டார துணை ஆணையாளர் பிரவீன் குமார், தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன் (பொது) உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News