மண் கடத்திய லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே மண் கடத்திய லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

Update: 2024-04-26 14:55 GMT

மண் கடத்திய லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த வித்வான்தாங்கல் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் மாவட்ட கவுன்சிலரின் உறவினர் வெங்கடேசன் தினசரி முரம்பு மண் கடத்தி செல்கிறார்.சம்பவத்தன்று கிராம மக்கள் 10-க்கும் மேற்பட்டோர் முரம்பு மண் கடத்தி சென்ற லாரியை சிறைபிடித்தனர். வெங்கடேசன் பொதுமக்களை ஆபாசமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து போலீசார் வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News