ஓமலூரில் தேங்காய் பருப்பு ரூ.6.15 லட்சத்திற்கு ஏலம்

ஓமலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் தேங்காய் பருப்பு ரூ.6.15 லட்சத்திற்கு விற்பனையானது.

Update: 2023-10-20 02:09 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தமிழ்நாடு அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கடந்த இரண்டு நாட்களாக 22 விவசாயிகள் 170 முட்டைகளில் தேங்காய் பருப்பு கொண்டு வந்தனர். விவசாயிகள் கொண்டு வந்த தேங்காய் பருப்புகள் நேற்று ஏலம் விடப்பட்டது. மொத்தம் 615361.13 ரூபாய்க்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது எனவும், தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக 85.15ரூபாய்கும், குறைந்த பட்ச விலை 66.55ரூபாய்கும், சராசரி விலையாக 84.89ரூபாய்கும் ஏலம் போனது என வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தகவல் தெரிவித்தார்.

Tags:    

Similar News