பரமத்தி வேலூரில் ரூ.1லட்சத்திற்கு தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1லட்சத்திற்கு தேங்காய் ஏலம் போனது.

Update: 2024-06-04 15:09 GMT

விற்பனைக்கு வந்த தேங்காய்

பரமத்திவேலூர், ஜுன்.5  பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 4, 337கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.24.19-க்கும், குறைந்த பட்சமாக ரூ.21.25-க்கும், சராசரியாக ரூ.22.29-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 434-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‌ஏலத்திற்கு 4 ஆயிரத்து 450 -கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.26.39-க்கும், குறைந்தபட்சமாக ரூ20.79- க்கும், சராசரியாக ரூ.‌22.29-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ 1 லட்சத்து ஆயிரத்து 150- க்கு ஏலம் நடைபெற்றது.

Tags:    

Similar News