பறக்கும் படையினர் செயல்பாடுகளை ஆட்சியர் ஆய்வு

மதிகோண்பாளையத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரின் செயல்பாடுகளை ஆட்சியர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-03-30 01:14 GMT

மதிகோண்பாளையத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரின் செயல்பாடுகளை ஆட்சியர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.


மதிகோண்பாளையத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரின் செயல்பாடுகளை ஆட்சியர் சாந்தி ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, சந்தைகளில் ஆடு, மாடுகளை விற்பனை செய்து ஆதாரமின்றி கொண்டு வரும் பணத்தை பற்றி விசாரணை மேற்கொள்ளும்போது கால்நடை எந்த சந்தையில் விற்பனை செய்யப்பட்டது, யார் யாருக்கு விற்பனை செய்தது. என்ன விலைக்கு விற்பனை செய்யப்பட்டது என்ற விவரம் முழுவதையும் கண்ணியத்துடன் கேட்டறிந்து மற்றும் வார சந்தை நுழைவுச்சீட்டு போன்ற தொடர்புடைய ஆவணங்கள் எதேனும் அதற்கு ஆதாரமாக உள்ளதா என்பதை கேட்டறிந்து அன்றைய தினம் வார சந்தை செயல்படுகிறதா என்பதையும் உறுதி செய்து தாமதமின்றி உடனுக்குடன் விசாரித்து அவர் கொண்டு வந்த பணம் தேர்தல் செலவினம் சாராத பணம் என விசாரனையில் தெரியவந்தால் அவ்விசாரனையில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமளிக்கா வண்ணம் கைப்பற்றப்பட்ட தொகை எந்த விதத்திலும் தேர்தலுடன் தொடர்புடையது இல்லை என்பதை நேர்மையுடன் உறுதி செய்து கைப்பற்றப்பட்ட தொகையினை மீள உடனடியாக விடுவிக்க வேண்டும்.

Tags:    

Similar News