குறைத்தீர் நாள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்ட கூட்டரங்கில் நடைப்பெற்ற குறைத்தீர் கூட்ட நாளில் அளிக்கப்பட்ட மனுக்களை கனிவுடன் பரீசிலிக்க ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Update: 2024-02-14 03:10 GMT

குறைத்தீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது மனு அளிக்க வந்த பொதுமக்களை இருக்கையில் அமரவைத்து அவர்களின் கோரிக்கை மனுக்களை துறை அலுவலர்கள் மூலம் பரிசீலக்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது கனிவுடன் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க பல்வேறு துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல் வழங்கினார்.

Tags:    

Similar News