மின்வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

போளூர் அருகே மின்வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-10 03:25 GMT

மின்வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த அலங்காரமங்கலம் கிராமத்தை சேர்ந்த பூவாரி (வயது 44) மகன் நாவலன் (வயது 19), கலசபாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் விளாப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பொன்னன் என்பவரது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி நாவலன் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News