ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

குமரியில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-06 09:12 GMT
நாகர்கோவில் ஏ எஸ் பி -யிடம் புகாரளித்த அதிமுகவினர்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக துணை செயலாளர் சுகுமாரன் தலைமையில் அதிமுகவினர் நாகர்கோவில் ஏ எஸ் பி யாங்சென் டோமா பூடியாவிடம் ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது,  நாகர்கோவில் ஒரு திருமண மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் அவரது அணியினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

இந்த கூட்டத்திற்காக வருகை தந்த ஓ பன்னீர் செல்வத்தை வரவேற்கும் வகையில் அதிமுக கொடி மற்றும் பெயரை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் எண்ணத்தோடு அந்த அமைப்பினர் பயன்படுத்தி உள்ளனர்.       குறிப்பாக அந்த அணியின் மாவட்ட செயலாளர்கள் எஸ் ஏ  விக்ரமன், பி. டி செல்லப்பன் ஆகியோர்  உயர்நீதிமன்ற உத்தரவை மாதிரி தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கி,  கலகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு உள்ளனர்.       எனவே உயர் நீதிமன்ற உத்தரவு மீறி செயல்பட்ட சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று மனுவில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News