மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்!

பெரணமல்லூர் அருகே மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-04-29 16:20 GMT

பெரணமல்லூர் அருகே மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செய்யாற்று படுகையில் இருந்து சிலர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தனர். போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டிகளை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.அதைத்தொடர்ந்து போலீசார் 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News