காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஆலங்குளம் அருகே சுரண்டையில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் மக்களவை தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

Update: 2024-03-31 07:53 GMT

ஆலோசனை கூட்டம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தோ்தல் தொடா்பான காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவா் சு.பழனிநாடாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியில் தோ்தல் பிரசாரம் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக மாவட்ட காங்கிரஸ் தலைவா் சு.பழனிநாடாா் எம்.எல்.ஏ.விடம் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ராபா்ட் புரூஸ் வாழ்த்து பெற்றாா். கூட்டத்தில் காங்கிரஸ் நிா்வாகிகள் சிவனேஷ் ராஜேஷ், காமராஜ், ராஜசேகா், ஜெயபால், லெனின், சிங்ககுட்டி, பிரபாகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News