நெல்லையில் மாணவர்களுக்கு பயிற்சிக்கு அழைப்பு விடுத்த காப்பாட்சியர்
நெல்லையில் மாணவர்களுக்கு பயிற்சிக்கு காப்பாட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-26 09:53 GMT
நெல்லை அரசு அருங்காட்சியகம்
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் நாளை (மே 27) அன்றைய காலகட்டத்தில் சினிமா துறையில் பயன்படுத்திய ஓவிய கலை முறை பயிற்சியான நிழல் ஓவியம் பயிற்சி வழங்கப்படுகின்றது.
இதில் மாணவர்கள் கலந்து கொள்ள இன்று (மே 26) காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி அழைப்பு விடுத்துள்ளார்.