மாநகராட்சி ஆணையர் குறித்து அவதூறு - ஒப்பந்ததாரர் கைது

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய ஒப்பந்ததாரரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-06-07 02:39 GMT

பைல் படம் 

தஞ்சாவூர் மாநகராட்சியின் தற்போதைய ஆணையராக இருப்பவர் இரா.மகேஸ்வரி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக இருந்தார். அப்போது, ஒப்பந்தப் பணி வழங்குவது தொடர்பாக இவருக்கும், காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார் பாளையத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் கே. சுடர்மணிக்கும் (56) முரண்பாடு ஏற்பட்டது. இந்த முன் விரோதம் காரணமாக தன்னைப் பற்றி சமூக வலைதளத்தில் தவறான தகவல்களைக் கூறி அவதூறு பரப்பி வருவதாக சுடர் மணி மற்றும் மன்னார்குடியைச் சேர்ந்த பாலு மீது தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் ஆணையர் மே 31 ஆம் தேதி புகார் செய்தார்.  இதன் பேரில் சுடர்மணி, பாலு மீது மேற்கு காவல் நிலையத்தினர் ஜூன் 2 ஆம் தேதி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, சுடர்மணியை காவல் துறையினர் கைது செய்தனர்.
Tags:    

Similar News